Arulmigu Karbagambal Amman and Sri Kabaliswarar Temple-Mylapore
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் - மயிலாப்பூர்





இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கபாலிஸ்வரர்

இறைவி : அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் அம்மன்

தல விருட்சம் : புண்ணை மரம்

தீர்த்தம் : கபாலிதீர்த்தம்



God : Arulmigu Sri Kabalishwarar

Godess : Arulmigu Sri Karpagambal Amman

Tree : Punnai Tree

Theertham : Kabali Theertham

Mylapore Arulmigu Kabaliswarar Temple is Famous Shiva Temple In Tamilnadu India

Arulmigu Kapaleeswarar Temple, Mylapore



mylapore Kapaleeswarar Temple

      Kapaleeswarar temple is a hindu temple dedicated to God Shiva located in Mylapore,Chennai City in the state of Tamilnadu. Mylapore Kapaleeswarar Shiva Temple is one of the most famous shiva temple in Tamil Nadu, In Mylapore Temple God Name is Shree Kapaleeswarar and Amman name is Shree Karpagambaal Amman ,God Kapaleeswarar is a swayambu in this temple. Mylapore Kapaleeswarar Temple is one of the 276 Thevaram Padal Petra Sthalams and 24th Shiva Sthalam in Thondai Nadu. There is the place Goddess Parvathy took the form of peacock and worshiped Lord kabaliswarar Shiva in Mylapore. the lord shiva here is known as Sri Punnaivana Nathar (“Punnai vanam” means a forest of Punnai trees). The Goddess Parvathi in a peacock form can be seen in this shrine.

Mayilai or Mylapore is derived from the legend that the Goddess Parvathi worshipped Lord Shiva in the form of a peacock. There are seven famous Shiva temples in Mylapore — Kapaleeswarar, Vellishwarar, Karneeshwarar, Virupakshishwarar, Valishwarar, Malleeshwarar and Theerthapaleeswarar. The Kapaleeshwarar Temple is Chennai's most active and impressive temple.




அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்



      இறைவி மயிலாக வந்து இறைவனை பூசித்தமையால் இப்பதி மயிலாப்பு ,மயிலாப்பூர் என்ற பெயர்களை கொண்டது. அவற்றின் மரூஉவே மயிலை என்பதாகும். கபாலீஸ்வரர் வீற்றிருந்ததால் கபாலீச்சரம் என்ற பெயரும் பெற்றது.புண்ணை இத்தலத்து விருட்சமாதலால் புன்னைவனம் என்பதும்,வேதங்கள் பூசித்தமையால் வேதபுரி என்பதும் சுக்கிரன் பூசித்தமையால் சுக்கிரபுரி என்பதும் இத்தலத்துக்குரிய வேறு பெயர்களாகும்.இத்தலத்தில் திருஞானசம்மந்தர் அருளிய அங்கம் பூம்பாவை ஒவ்வொரு பாடலிலும் மயிலையில் மாதந்தோறும் புரட்டாசி முதல் ஆணி வரை நடைபெறும் திருவிழாக்களை கூறி இந்த விழாக்களை காணாமல் போதியோ பூம்பாவாய் என அருள செய்கின்றார்.

       காசி, தில்லை, திருவாரூர், முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம்.சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்

Mylapore Temple Opening Time
திருக்கோவில் திறக்கும் நேரம்



காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

Mylapore Temple Pooja Time திருக்கோவில் பூஜை நேரம்




5.00 a.m.- கோ பூஜை

6.00 a.m.- வைகறை பூஜை

8.00 a.m.- கால சாந்தி பூஜை

12.00 p.m.- உச்சி கால பூஜை

9.00 p.m.- அர்தசாம பூஜை

ArupathiMoovar

அறுபத்திமூவர் திருவிழா


இந்த திருமலையில் வருடம் தோறும் பங்குனி உத்திரத்தையொட்டி பிரமோற்சவம் நடந்து வருகிறது. அதில் 8 ம் நாள் திருவிழாவிற்கு அறுபத்திமூவர் உற்சவம் என்று பெயர்.அன்று கபாலீஸ்வரர் அறுபத்திமூன்று நாயன்மார்களுடன் மாலை 3 மணிக்கு திவ்ய சேவை அளிப்பது வழக்கம். பார்வதி தேவியிடமிருந்து ஞானப்பால் உண்டு உலகில் சன்மார்க்கத்தை நிலைநிறுத்திய ஸ்ரீ சுப்பிரமணியர் அவதாரமாகிய திருஞான சம்மந்த ஸ்வாமிகள் காலத்தில் திருமயிலையில் வைச்யர் குலத்தில் சிவநேச செட்டியார் என்பவர் இருந்தார். அவர் பெயருக்கேற்ற படி அவர் சிவபெருமான், சிவனடியார்கள் ஆகியவர்களிடம் பக்தி செலுத்திஇருந்தார்.இவர் திருஞான சம்மந்த ஸ்வாமிகள் செய்த திவ்ய செயல்கள் சன்மார்க்க ஸ்தாபனம் செய்த வழிகள் முதலியன கேள்விப்பட்டு அவரிடம் நல்ல அன்பு பாராட்டி வந்தார். ஆனால் அவரை பார்க்க செட்டியாருக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. ஒவ்வொரு நாளும் செட்டியாரிடம் வந்து எட்டும் திருஞான சம்மந்தரது அற்புத செயல்களெல்லாம் அவருக்கு திருஞான சம்மந்தரது மேலிருந்த அன்பை அதிகப்படுத்தியது.ஆனந்த பரவசத்தில் தன் பெண் சொத்து முதலியவைகளை திருஞானசமந்த ஸ்வாமிகளுக்கு அர்ப்பிதம் செய்தனர். இவ்வாறு இவர் திருஞானசமந்த ஸ்வாமிகளின் மீது அன்பு வளர்ந்து வரும் நிலையில் இவர் அருமை பெண் பூக்கொய்ய தோட்டத்திற்கு போனவிடைத்து பாம்பு கடித்து இறந்தாள்.சிவபக்தி விஷயத்தில் தன் பெண்ணிடம் இருந்த பற்றால் செட்டியார் சற்று தூக்கித்து விட்டுத் தன் பெண்ணை தகனம் செய்து திருஞானசமந்த சாமிகள் திருமயிலைக்கு வருங்கால் அவர் பாதத்தில் அவள் எலும்பை அர்ப்பிதம் செய்வதாக எண்ணி, அதை ஒரு பானையில் இட்டு அதையே பூம்பாவையாக பாவித்து தகுந்த மரியாதைகள் செய்து வந்தார்.
திருமயிலைக்கு வடக்கிலுள்ள திருவொற்றியூர் ஸ்வாமி தரிசனத்திற்காக சம்மந்த ஸ்வாமிகள் ஏழுந்தருளியிருப்பதாக செட்டியாருக்கு தகவல் எட்டியது. உடனே அவர் சம்மந்த ஸ்வாமிகளுக்கு மரியாதை செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிட்டு அவரை எதிர் கொண்டழைத்தவர அவர் திருவொற்றியூரை நோக்கி புறப்பட்டார்.இருவரும் வழியில் சந்தித்தனர்.செட்டியார் ஆனந்த பரவசராகி இருவரும் வார்த்தையாடி வருகையில் செட்டியார் தனது பெண் விசயத்தை முழுவதும் சொல்லி அவள் எலும்பை கிருபைகூர்ந்து அங்கீகரிக்கவேண்டும் என்று சம்மந்த ஸ்வாமிகளை வேண்டிக்கொண்டார். இதைக்கேட்டு கொண்டு சம்மந்த ஸ்வாமிகள் மயிலை வந்து சேர்ந்து, ஸ்தானம் முதலியவைகளை முடித்துக்கொண்டு கபாலீஸ்வரரை செட்டியாருடன் சென்று தரிசித்து சந்நிதியில் வந்து செட்டியாரை நோக்கி அவர் பெண் எலும்பை கொண்டுவரும் படி கட்டளையிட்டார்.
செட்டியார் அந்த எலும்பு பாத்திரத்தை பல்லக்கில் ஏற்றி சீர் முதலியவையோடு எடுத்து வந்து பகவத் சன்னிதானத்தில் வெளியில் கொண்டு நிறுத்தினார். அப்போது சிவபக்தர்கள் ஏல்லோரும் வந்து கூடினர். ஏல்லோரும் மிகுந்த ஆவலுடன் ஏன்னா நடக்க போகிறது என்று கண்கொட்டாது பார்த்து கொண்டிருக்கியில் , சிவபிரானை மனதில் தியானமூலமாக அமைத்துக்கொண்டு அந்த பலத்தால் "சிவனடியார்களுக்கு தொண்டு செய்தலும், சிவபெருமான் திருவிழாவைக்கண்டு ஆனந்தத்திலுமே, துர்ப்பலமான மனிதப்பிறவியின் பயன் என்பது உண்மையாகில் இப்பூம்பாவை உயிருடன் எழட்டும் " என்று சபதம் செய்து சம்மந்த ஸ்வாமிகள் பின்வரும் பதிகத்தை பாடி அருளினார்.
இப்பாட்டு படி வருகையில் முதலில் பூம்பாவை உருவம் பெற்று பின்னர் முறையே பனிரெண்டு வயது வரையில் வளர்ந்த முடிவில் மிகுந்த அழகிய உருவத்தோடு அவள் குடத்தை விட்டு வெளியே வந்தாள்.ஏல்லோரும் கண்டு வியந்தனர். சிவநேச செட்டியார் அனந்த பரவசமாகி சம்மந்த ஸ்வாமிகளின் காலில் விழுந்து தாம் முன்னர் செய்த பிரதிக்கினை படி தம் பெண்ணை சம்மந்த ஸ்வாமிகளுக்கு அர்ப்பணித்து கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.அதற்கு சம்மந்த ஸ்வாமிகள் செட்டியாரை நோக்கி நீர் இப்பூம்பாவையை பெற்றெடுத்ததால் அவளுக்கு பிதா, அதுபோல இறந்த அவளை மறுபடி உயிரோடு எலும்படி செய்த நானும் அவளுக்கு பிதாவாக வேண்டும். ஆதலால் நான் அவளை கல்யாணம் செய்துகொள்வது தகுதியில்லை என்றார்.செட்டியாரும் அவர் உறவினர்களும் மிகுந்த துக்கத்திற்கு ஆளாகி தத்தளிப்பதை கண்டு சம்மந்த ஸ்வாமிகள் வேதத்திலிருந்து நியாயம் காட்டி அவர்களை தேற்றி, திருமயிலை விட்டு வேறு திருப்பதியை தரிசிக்க சென்றனர். சம்மந்த ஸ்வாமிகளுக்கென்று குறிப்பிட்டமையின் பூம்பாவையை செட்டியார் வேறுஒருவருக்கு விவாஹம் செய்து கொடுக்காமல் விட அவள் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து பரமபக்த சிரோமணியாக விளங்கி முடிவில் பரம பதம் பெற்றாள்.
எட்டாம் திருவிழாவன்று காலை 8 மணிக்கு திருஞானசமந்த ஸ்வாமி கோயிலிலிருந்து ஏழுந்தருளி, ரத வீதி வழியே வந்து பெரியகுளம் மேலண்டை கரையிலுள்ள படித்துறையில் போட்டிருக்கும் தென்னண்டை பந்தலில் இறங்குவர்.இதற்கு முண்மையே சிவநேச செட்டியாரையும்குளம் மேல் துறையில் இருக்கும் வடவண்ட பந்தலில் கொண்டுவந்து வைத்துஇருப்பார்கள். அன்று அதிகாலை சூரியோதயத்திற்கு முண்மையே பூம்பாவை அலங்கரித்து திரையால் மூடப்பட்டு மேலண்டை வீதி வடக்கு மூலையில் உள்ள ஒரு பந்தலில் வைத்துஇருப்பார்கள். ஞானசமந்தரும் , செட்டியாரும் குளத்தில் ஸ்தானம் முதலியவைகள் செய்து அவரது விக்கிரகத்திற்கு அபிஷேக அலங்காரம் செய்யப்படும். உடனே செட்டியாரும் சம்மந்த ஸ்வாமிகளும் புறப்பட்டு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய போவார்கள்.பின்பு மேலண்டை தெரு வழியாக சுவாமி சன்னதிக்கெதிரில் வைக்கப்பட்டுஇருக்கும் பூம்பாவை விமானதருகில், செட்டியாருடன் சம்மந்த ஸ்வாமிகள் வந்து நிற்பார். உடனே பூம்பவிக்குரிய சீர்கள் எல்லாம் உள்ளூர் திருவண்ணாமலை மடாதிபதி யாழ் எடுக்கப்பெற்று வந்துசேரும். பின்னர் கோயில் ஓதுவார் முறையே முன் எடுத்து ஏழுதியுள்ள பூம்பாவை திருப்பதிகம் பாடுவார்.ஓவொரு பாட்டு முடிந்ததும் சம்மந்த ஸ்வாமிகளுக்கு கற்பூர ஆரத்தி செய்யப்படும்.பதக்கம் முடிந்ததும் பூம்பாவை விமானத்தை மறைத்தியிருக்கும் திரை நீக்கப்பட உயிருக்கும் அலங்கரித்த பூம்பாவைக்கும் சம்மந்த ஸ்வாமிகளுக்கும் தீபாராதனை நடைபெறும்.இதன் பின்பு சம்மந்த ஸ்வாமிகள், செட்டியார் , பூம்பாவை ஆகிய மூவரும் கோயில் பக்கம் போக அங்கு கபாலீஸ்வரர் அறுபத்திமூன்று நாயன்மார்களுடன் வந்து நிற்பார். மூண்று பெயர்களும் கோவிலுள் சென்று மூல லிங்கத்தை ஆராதித்த பின்னர் உற்சவ மூர்த்தியை வலம் எதிரே நிற்க பகவான் இம்மூன்று பேர்களுடன் அறுபத்திமூன்று நாயன்மார்கள் ஆகிய இவர்களுடன் மாலையில் திருமயிலை வீதியில் ஆனந்த பவனி புறப்படுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக